வாஷிங்டன் / டெஹ்ரான் | ஏப்ரல் 14, 2026

உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் பெரும் பகுதி கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) அமெரிக்க ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவையடுத்து, இந்திய நேரப்படி ஏப்ரல் 13 இரவு 7:30 மணிக்கு இந்த மூடல் நடவடிக்கை அமலுக்கு வந்தது.

1. போர்க்களமாகும் கடல் பகுதி:

அமெரிக்காவின் இந்த அதிரடித் தடையை அமல்படுத்த ஆபிரகாம் லிங்கன், ஜெரால்டு ஆர் போர்டு உள்ளிட்ட 23 பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் மற்றும் 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறமும் நிலைகொண்டுள்ளன.

2. கச்சா எண்ணெய் விலை உயர்வு:

இந்தத் தடையால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

3. ட்ரம்ப்பின் எச்சரிக்கை & இஸ்ரேல் ஆதரவு:

“ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் எந்தக் கப்பலையும் ஜலசந்திக்குள் நுழைய விடமாட்டோம்; மீறினால் தகர்க்கப்படும்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அதேநேரம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள இஸ்ரேல், “ட்ரம்ப் உத்தரவிட்டால் அடுத்த நொடியே ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயார்” என அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *