சென்னை | ஏப்ரல் 15, 2026

மத்திய பாஜக அரசு நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்தை, “வரலாற்று அநீதி” எனச் சாடியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அதற்கு எதிராகத் தமிழகம் முழுவதும் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக்கொடி ஏற்றிப் போராட அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் அனல் பறக்கும் முழக்கங்கள்:

“தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்! ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்!” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

உயரும் எதிர்ப்பு அலை:

ஏற்கனவே தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தென்மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து கிளம்பியுள்ள இந்த “கருப்புக்கொடி” முழக்கம், தென்னிந்திய மாநிலங்களிடையே ஒரு ஒருங்கிணைந்த போராட்ட உணர்வைத் தூண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *