சென்னை | ஏப்ரல் 6, 2026

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்காகப் பரப்புரை செய்ய டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர்களும், பிற மாநில முதலமைச்சர்களும் படையெடுத்து வந்துள்ள நிலையில், அவர்கள் பதில் சொல்ல வேண்டிய முக்கியக் கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் தனது ‘X’ (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பட்டியலிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் 5 முக்கியக் கேள்விகள்:

  1. மும்மொழிக் கொள்கை: “தமிழ் மண்ணில் நின்று கொண்டு, ‘நாங்கள் மும்மொழிக் கொள்கையை (இந்தி திணிப்பு) அமல்படுத்துவோம்’ என்று வெளிப்படையாகச் சொல்லிப் பரப்புரை செய்யத் தயாரா?”
  2. நிதி ஒதுக்கீடு: “தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதி எவ்வளவு? பாஜக ஆளும் ‘செல்லக்குழந்தை’ மாநிலங்களுக்கு (உபி, பீகார் போன்றவை) வழங்கும் நிதி எவ்வளவு? இதை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?”
  3. FCRA சட்டத்திருத்தம்: “கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளைக் குறிவைக்கும் FCRA சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெறுவீர்களா? அல்லது அடுத்த வாரமே அதை நிறைவேற்றப் போகிறீர்களா?”
  4. எடப்பாடி பழனிசாமிக்குக் கேள்வி: “இந்தக் கேள்விகளுக்குத் தனது டெல்லி ஓனர்களிடம் (பாஜக) இருந்து எடப்பாடி பழனிசாமியால் பதில் பெற்றுத் தர முடியுமா?”
  5. வாழ்வுரிமைப் பிரச்சினைகள்: “கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை நிறுத்திவிட்டு, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளைப் பேச பாஜக முன்வருமா?”

“தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” – முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்.


அன்றைய பிற முக்கியச் செய்திகள் (ஏப்ரல் 6, 2026):

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *