புது தில்லி | ஏப்ரல் 17, 2026

தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கங்களை ஆதாரங்களுடன் மறுத்துப் பேசினார். “தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மறைக்க எண்களை வைத்து ஏமாற்றுகிறார்கள்” என அவர் குற்றம் சாட்டினார்.

கனிமொழி முன்வைத்த 4 முக்கியக் கேள்விகள்:

  1. மசோதாவின் பிரிவு 4 (Section 4): “அமைச்சர் அமித் ஷா நேற்று நாடாளுமன்றத்தில் ‘தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையாது’ என வாய்மொழி உறுதி அளித்தார். ஆனால், அவர் தாக்கல் செய்துள்ள மசோதாவின் பிரிவு 4-ல், கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் (Census) அடிப்படையில் தான் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது அமைச்சர் சொல்வதற்கு நேர்மாறாக உள்ளது.”
  2. மக்கள் தொகை கட்டுப்பாடு – தண்டனையா?: “தேசத்தின் நலன் கருதி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் இந்த மசோதா உள்ளது. மக்கள் தொகையை உயர்த்திய மாநிலங்களுக்குப் பரிசும், கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனையுமா?”
  3. பேசக் கூட வாய்ப்பு கிடைக்காது: “மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்தினால், அவையில் ஒரு உறுப்பினருக்குத் தனது தொகுதிப் பிரச்சனைகளைப் பேசக் கூடப் போதிய நேரம் கிடைக்காது. இது ஜனநாயக விவாதங்களின் தரத்தைக் குறைக்கும்.”
  4. உறுதிமொழி எங்கே?: “முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் ஆகியோர் வழங்கிய சட்டப்பாதுகாப்பு ஏன் இப்போது வழங்கப்படவில்லை? வெறும் வாய்மொழி வார்த்தைகளைத் தமிழகம் நம்பாது.”

அமித் ஷா vs கனிமொழி: எண்கள் சொல்வது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *