மதுரை | ஏப்ரல் 6, 2026

கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 9 காவல்துறையினருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி ஜி. முத்துக்குமரன் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

குற்றவாளிகளின் விவரம்:

இந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட மொத்தம் 9 பேர் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டனர். (சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை விசாரணையின் போதே உயிரிழந்தார்).

பின்னணி:

ஜூன் 19, 2020 அன்று இரவு 9 மணிக்கு மேல் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விடிய விடியக் கொடூரமாகத் தாக்கினர். இதில் அடுத்தடுத்து தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலகளவில் கடும் கண்டனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *