வாஷிங்டன் | ஏப்ரல் 2, 2026

ஈரான் மீதான ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர் தொடங்கி 5 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், போரின் இறுதி இலக்கை எட்டிவிட்டதாக அறிவித்துள்ளார். அதேசமயம், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லையெனில் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை முற்றிலும் அழிப்போம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

ட்ரம்ப் உரையின் முக்கிய அம்சங்கள்:

அமெரிக்காவின் ராணுவ இலக்குகள்:

அமெரிக்க ராணுவம் இதுவரை ஈரானின் 12,300-க்கும் மேற்பட்ட இடங்களைத் தாக்கியுள்ளதாகவும், அந்நாட்டின் கடற்படை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாத நிலையை உருவாக்குவதே தங்களின் இறுதி நோக்கம் என்றும் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *